மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட விளநகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்பவரின் மகன் 25 வயதான ஜெயப்பிரகாஷ். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த  சிறுமி பள்ளிக்கு சென்று வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது  வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார் ஜெயபிரகாஷ்.




இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டு உள்ளார். அப்போது சிறுமியின் வாயை மூடி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என ஜெயபிரகாஷ் மிரட்டியதாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது தாயாரிடம்  கூற, இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.


West Bengal Election Result: மேற்கு வங்காள உள்ளாட்சித் தேர்தல்; திரிணாமுல் காங்கிரஸ் அபார முன்னிலை




புகாரின் பேரில் மயிலாடுதுறை  அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் நாகவல்லி விசாரணை மேற்கொண்டு ஜெயபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து நாகப்பட்டினம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண