கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் இயங்கி வருகிறது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்து வந்த இரு மாணவர்கள், வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

Thiruvanmiyur Bus Depot: இனி போட் தேவைப்படாது..! அப்கிரேட் ஆகும் திருவான்மியூர், ரூ.35.11 கோடியில் பலே திட்டம்..


இதில் நெருக்கிய நண்பர்களான கொள்ளிடத்தை சேர்ந்த மாணவர் செல்வம் மற்றும் சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த புவனேஷ் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் (பைக்) சென்றுள்ளனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில் சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த லாரியும், மாணவர்கள் பயணித்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...


விபத்து குறித்து போலீசார் விசாரணை

இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாணவர்கள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவரின் திடீர் உயிரிழப்பு, அவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!


விபத்து குறித்து மேலதிக விசாரணை

மேலும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும், குறிப்பாக விபத்தின் போது லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? வேகமாக வந்தாரா? அல்லது மாணவர்கள் வேகமாக பயணித்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அரசு பெரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

உலகின் மகிழ்ச்சியற்ற நாடு இதுதான்! மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா!

Continues below advertisement
Sponsored Links by Taboola