மதுரை மாவட்டம் மேலூர் அருகே  கொட்டாம்பட்டியில் போலியாக மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களை மத்திய நுண்ணறிவு போலீசாரால் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூரில் நேற்று 350 மதுபானங்கள் விற்ற மோகன் என்பவரை கைது செய்து மத்திய நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டாம்பட்டி பகுதியில் போலி மதுபானங்கள் வைத்திருப்பதாக தகவல் அளித்துள்ளார்.

 





அதன்பேரில், மத்திய நுண்ணறிவு காவல் ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான  போலீசார் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பூபதி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பகுதியில் போலி மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த ஸ்பிரிட், ஆல்காலிக் மீட்டர், மதுபான ஸ்டிக்கர் மற்றும் மூடிகள் மதுபான மூலப்பொருட்கள் மற்றும் 750 லிட்டர் போலி மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.



 

சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபான மூலப்பொருட்களை பறிமுதல் செய்து மத்திய நுண்ணறிவு போலீசார் இதுதொடர்பாக தென்னந்தோப்பு உரிமையாளர் பூபதியிடம் முதற்கட்டவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போலி மதுபானம் தொடர்பாக தலைமறைவாக உள்ள லால்குடியை சேர்ந்த ஜான்சன் குறித்து  மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.