பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது 9வயது சிறுமி ஒருவரை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியில் ஒரு தம்பதி ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த தம்பதி இருவருக்கும் 9வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் சண்டை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவருடன் சண்டை இட்டு மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 


 


இந்த நேரத்தில் அவர்களுடைய 9 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் இருந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த நபர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் இருந்த தன்னுடைய 9வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டிவிட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். 


 


அந்தச் சிறுமியின் தாய் இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய போது தன்னுடைய தந்தை தொடர்பாக அச்சிறுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் தந்தை மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை தொடர்ந்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் சிறுமியின் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


 


முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இதுபோன்று சம்பவம் ஒன்று நடந்தது. 42 வயதான தந்தை ஒருவர் தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அந்த வீட்டிலும் கணவருடன் மனைவி சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 


 


இந்த குற்றம் தொடர்பாக அச்சிறுமியின் ஆசிரியர் ஒருவர் கண்டறிந்துள்ளார். அந்தச் சிறுமி தன்னுடைய பள்ளி நேரம் முடிந்தும் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீட்டிற்கு செல்ல ஆசிரியை ஒருவர் அச்சிறுமியிடன் கூறிய போது அந்தச் சிறுமி நடந்த விஷயங்களை கூறி அழுதுள்ளார். அப்போது இந்த விஷயம் தொடர்பாக தெரிந்து கொண்ட ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அடுத்த 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தந்தை ஒருவர் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண