கரூரில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கடை பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, மில்கேட் பகுதியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ராஜா பெயிண்ட்ஸ் & கலர்ஸ் என்ற பெயரில்   கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இரவு வழக்கம் போல் வேலை முடிந்து கடையை பூட்டு போட்டு இழுத்து பூட்டிவிட்டு உரிமையாளர் சென்று விட்டார். 




 


காலை 10.00 மணி அளவில் கடையை திறக்க வந்த உரிமையாளர் ஒரு பக்க சட்டரில் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த 8 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு கந்தசாமி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அப்பகுதிக்கு வந்த தாந்தோணிமலை போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 






ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண