கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருநங்கை தாட்சாயினி கரூர் நகர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




திருநங்கையின் கணவர்:


கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி.  திருநங்கையான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் குமார் அவரது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றபின்பு வரவில்லை. அவரை  வீட்டிற்கு திரும்ப வரவிடாமல் அவர்கள் குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.


 




 


காவல்நிலையம் முன்பு தற்கொலை முயற்சி:


இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில் எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் திடீரென கரூர் நகர காவல் நிலையம் அருகே விஷம் அருந்தும் வீடியோவை வெளியிட்டு விட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாட்சாயணி விஷம் அருந்தியது அறிந்த காவலர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தாட்சாயினியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கரூர் நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




 


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)