விழுப்புரம்: மரக்காணம் அருகே  சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து பல கோடிக்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் ஜேசிபி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராம கிழக்கு கடற்கரை சாலை ஓரம் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளங்களை ஒரு கும்பல் கொல்லையடிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகாம் சம்பவ இடத்துக்கு சென்று சார் ஆட்சியர், கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் கீழ்புத்துபட்டு கிராம கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அருள்ஜோதி, உதயகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில், அவரது கணவர் உதயகுமார் ராமலிங்கம் என்பவர் இவர் திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார், இதை பயன்படுத்தி சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து அங்கு பல நூறு டன் மணல் கடத்தி வந்தது உறுதியானது.

இதனை அடுத்து சார் ஆட்சியர் அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர் டிப்பர், 1 மினி லாரி, 1 டிப்பர் லாரி மற்றும் பதிவெண் இல்லாத ஜே.சி. பி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார். சார் ஆட்சியர் வாகனத்தை கண்டதும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

Continues below advertisement

உடனடியாக சார் ஆட்சியர் கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் உட்கோட்ட டிஎஸ்பி உமா செல்வி மற்றும் மரக்காணம் வட்டாட்சியர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தப்பியோடிய  நபர்கள் மற்றும் கோரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உதயகுமார் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரி மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திமுக பிரமுகர் சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.