24 வயது பெண்ணை 15 வயது சிறுவன் ஹோட்டல் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஹோட்டலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் (24) ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிகிழமை ஹோட்டலில் உள்ள பெண்கள் கழிவறையில் அந்தப் பெண் மொபைலை சார்ஜ் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.  அப்போது  ‘ஹாய்’ என்று சொல்லி உள்ளே நுழைந்த 15 வயது சிறுவன் ஒருவன், அந்தப் பெண்ணிடம் பேச முயன்றிருக்கிறார்.


உடனே பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தது குறித்து கேள்வி எழுப்பிய அந்தப்பெண், தொடர்ந்து முன்பின் தெரியாதவர்களிடமெல்லாம் நான் பேசுவதில்லை, அதனால் உடனே கழிவறையை விட்டு வெளியே செல்லுங்கள் என்று எச்சரித்திருக்கிறார். இதனையடுத்து  திடீரென்று உள்ளிருந்து கழிவறையின் கதவை மூடிய சிறுவன் அந்தப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். ஆனால் கதவி மூடப்பட்டிருந்ததால் அவரது சத்தம் வெளியே இருப்பவர்களுக்கு கேட்கவில்லை. கடந்த 2 நாட்களாக தனது குடும்பத்தினருடன் அந்த ஹோட்டலில் வசித்து வந்த அந்தச் சிறுவன் அன்று மதியம்  அந்த ஹோட்டலை காலி செய்வதாக இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையில் சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்த நிலையில் காவல்கள் அந்தச் சிறுவனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து கடந்த சனிக்கிழமை ஹைரித்வாரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.