வழக்கில் மாணவிகள், இளம்பெண்கள், சிறுமிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால் காசிக்கு ஜாமீன் வழங்க முடியாது - நீதிபதி

 

 சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் காசி தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆசை வார்த்தைகளை கூறி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோயிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி என்பவர் கடந்த 2022-ல் கைது செய்யப்பட்டார்.



 

இவர் மீது போக்சோ வழக்கு பாலியல் பலாத்கார வழக்குகள் என பல பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி காசி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்  சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில்,   சிறையில் உள்ள காசி 120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள்! இவரது லேப்டாப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் சில இளம் பெண்களிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது என நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில்  சிறுமிகள் சிலர் உள்ளனர். இதில் 17 வயது சிறுமி சாட்சி அளித்துள்ளார். எனவே, வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.



 

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்கின்  இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில், காசி மீது போக்சோ உள்ளிட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. 

 

இந்த வழக்குகளில் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். மேலும் சிலர் சாட்சியங்கள் அளிக்க உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் காசிக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை மிரட்டி சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது எனவே  காசியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.