கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


அதிலும் குறிப்பாக கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே, அளித்து உறங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது, என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்களது அறிக்கையின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.  




அதைத்தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே தமிழக அரசின் விதிகளை மீறி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுபோல் கரூர் மாவட்டத்தில் இதுபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறதா, என துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுக்கு ரகசிய தகவல் அடிப்படையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரி தலைமையில் மேற்படி விசாரணையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்து கொண்டனர். 


இந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள், இளைஞர் உள்ளிட்ட நான்கு நபர்களை மாவட்ட சமூகநலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 




கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22) இவருக்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ,கோவிந்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் - ராஜேஸ்வரி ஆகியோரின் 16 வயது மகளான சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி கரூரை அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும், அன்றிரவே முதலிரவு ஏற்பாடு செய்து நடந்துள்ளது. சிறுமிக்கு நடந்த சட்டவிரோத செயல் சம்பந்தமாக மாவட்ட சமூக நலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சந்தோஷ் அவரது பெற்றோர் மணிவேல் மற்றும் ராஜேஸ்வரி, சந்தோஷ் தாய் அமுதவல்லி ஆகியோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 




 கரூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிக்கு பெற்றோர் திருமண நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.