செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்துவரும்  ஷாயிஷா (26)  என்ற பெண்ணை அவரது கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்தசம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஷாயிஷாவுக்கு திருமணம் முடிந்து கணவர் இறந்த நிலையில் 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். திருமணம் முடிந்து கண்ணகி நகரில் குடியேறியதுபோது ஷாயிஷாவுக்கு பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் உயிரிழந்துள்ளார்



இதனையடுத்து ஷாயிஷா அவரது அம்மா மற்றும் 2 மகன்கள் உடன் வாடகை வீட்டில்  வசித்து வந்துள்ளனர். அப்பொழுது அவருக்கு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆண் நண்பர்கள் மூலம் சாயிஷாவிற்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான, அபின் , கஞ்சா போதைக்கு ஷாயிஷா அடிமையாகி  உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சாஷாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ள நிலையில், இரண்டாவது கணவனும் இறந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மூன்றாவதாக கார்த்திக் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்துள்ளது.

 



 

நேற்று ஷாயிஷா வீட்டிற்கு வந்துள்ளார் கார்த்திக். இரண்டாவது மகனை ஒரு அறையில்  பூட்டி வைத்து விட்டு தனிமையில் இருவரும் இருந்துள்ளனர். அதன்பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நீண்ட நேரம் கழித்து முதல் மகன் வந்து பார்க்கும் போது, ஷாயிஷா பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதனை அடுத்து  குழந்தை கூச்சலிட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தவுடன், உடனே ஆம்புலன்சிக்கு அச்சிறுவன் தகவல் அளித்துள்ளார்.

 



அதன்பேரில் ஆம்புலன்ஸ் நேரில் வந்து பார்த்து பரிசோதித்தபோது சம்பவ இடத்திலேயே சாயிஷா உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல்  தகவலின்பேரில் , விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.