சமூக வலைதளங்களில் திருடர்கள் திருடி மாட்டி கொள்வது தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மாட்டிக் கொண்ட திருடன் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 


டெல்லியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 27ஆம் தேதி 3 மர்ம நபர்கள் திருட வந்துள்ளனர். அவர்கள் வருவதை சிலர் சிசிடிவியில் பார்த்துள்ளனர். அதன்பின்னர் அவர்களை அப்பகுதியினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த சமயத்தில் திருடர்கள் 3 பேரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அதில் ஒரு சிறுவனை மட்டும் அப்பகுதியினர் பிடித்தனர். 






அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அழுதுள்ளார். மேலும் அவருக்கு பிறந்தநாள் என்று கூறி தன்னைவிட்டு விடுமாறு கோரியுள்ளார். மேலும் அச்சிறுவன், “சிறு வயது முதல் எனக்கு தந்தை இல்லை. ஆகவே எங்களுடைய வீட்டில் சரியான வருமானம் இல்லை” என்ற சோக கதையையும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு அப்பகுதியினர் திருடன் என்ற பெயரிடப்பட்ட கேக் வாங்கி வெட்டியுள்ளனர். அத்துடன் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த திருடனை காவல்நிலையத்தில் அப்பகுதியினர் ஒப்படைத்துள்ளனர். 






இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண