Delhi Crime : டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளில் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


30 குழந்தைகள்


உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரவீந்தர் குமார் தனது படிப்பை 6ஆம் வகுப்பிலேயே முடித்துக் கொண்டார். அதன்பின் அவர் தினக்கூலி வேலையில் சேர்ந்து சென்று கொண்டிருந்தார்.


இந்நிலையில் ரவீந்தர் குமார் சிறுவர், சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், ”ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அவருக்கு விருப்பமான குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதனை 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை சுமார் 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொலையும் செய்துள்ளார்” என்று தெரிவித்தனர். 


கைது


பகல் முழுவதும் வேலை செய்யும் ரவீந்தர், இரவில் குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்டவை கொடுத்து அவர்களை தனியாக அழைத்து கடத்தியுள்ளதோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில், ஆறு வயது சிறுமியின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும்போது ரவீந்தர் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது இந்த விசாரணை தொடர்பாக சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் ரவீந்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் பிறகே டெல்லி  சுக்பீர் நகர் பேருந்து நிலையில் போலீசார் கைது செய்தனர்.


பின்பு, அவரிடம் விசாரித்தபோது 30 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.  இதனை அடுத்து 2015ஆம் ஆண்டு 24 வயதில் கைது செய்யப்பட்ட ரவீந்தர் குமார், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


நீதிமன்றம் ரவீந்தர் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிகப்பட்ச தண்டனையை ரவீந்தர் குமாருக்கு வழங்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரவீந்ததர் குமார் மீதான தண்டனை விவரம் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க


Doctor Murder: சிகிச்சை அளித்த இளம் பெண் மருத்துவரை கொலை செய்த போதை வாலிபர்! கேரளாவில் கொடூரம்!


Kissing Women Underwater: நீச்சல் அடிக்க சென்ற பெண்ணை நீருக்கடியில் முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்! நடந்தது என்ன?


TN Rain Alert: வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் புயல்.. தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..