கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவரை கள்ளத்காதலனுடன் சேர்ந்து கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் கடலூரில் நடந்தேறியுள்ளது.


கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயியான இவர், தனது அக்கா மகள் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியும், மனைவியிடம் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவாராம் ராஜசேகர்.


தம்பி அடிக்கடி கேட்டதால் உண்மையை கூறிய அக்கா


இப்படி அடிக்கடி ராஜசேகர் வெளியூர் சென்றுவிடுவதால், அவருக்கும் மனைவிக்கும் இடையேயான உறவு தூரமாகிவிட்டது. இந்த நிலையில், சண்டையிட்டு வெளியூர் சென்ற ராஜசேகர் 9 மாதங்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருந்திருக்கிறார். மாமா குறித்து விஜயலஷ்மியின் தம்பி சிவக்குமார் கேட்டுள்ளார். அதற்கு விஜயலஷ்மி கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்தார். தனது கணவரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்துவிட்டதாக கூறினார். 


மேலும் படிக்க: Crime : லோன் ஆப்பில் கடன்வாங்கிய பெண்ணுக்கு மார்ஃபிங் செய்து பாலியல் தொந்தரவு.. குற்றவாளி சிக்கியது எப்படி?


விஜயலஷ்மி தனது கணவரை செய்தது குறித்து போலீசாருக்கு தெரியவர, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் உயரதிகாரிகள் வாழைத்தோட்டத்தை சோதனை செய்தனர். அப்போது, விஜயலஷ்மியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது கணவர் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை கணவர் கண்டித்ததாகவும் கூறினார். மேலும், 9 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகவும், அப்போது தானும், மோகனும் சேர்ந்து தனது கணவர் ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சடலத்தை புதைத்ததாகவும், தனது தம்பி கணவர் குறித்து அடிக்கடி கேட்ட வந்த நிலையில் உண்மையை கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க: Watch Video: 'வருவார்.. அலேக்காக தக்காளி பெட்டியை தூக்குவார்' சேலத்தை அலறவைத்த தக்காளி திருடன்!


கள்ளக்காதலன் எஸ்கேப்


விஜயலஷ்மி கூறிய தகவலால் ராஜசேகர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, ராஜசேகர் சகோதரர் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயலட்சுமியை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் முக்கியமானவரான கள்ளக்காதலன் மோகன் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண