பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


சுட்டுக் கொல்லப்பட்ட பெண்:


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.  இந்த நிலையில், புனேவில் இளம்பெண் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் செயல்பட்டு வரும் ஐடி கம்பெணி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் வந்தனா திவேதி (26).  இவர் இன்று அதிகாலை  ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்துள்ளார். இவரது உடலை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, மும்பை பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது, ரிஷப் நிகாம் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகின.


காரணம் என்ன?


அதில், பெண் வந்தனா திவேதியும், இளைஞர் ரிஷப் நிகாம் என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.  சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்ததை அடுத்து, இளைஞர் ரிஷப் நிகாம், இளம்பெண் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார். பின்னர், அங்கிருந்து மும்பைக்கு தப்பி சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும், இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  ஹோட்டல் அறையில் காதலித்த பெண்ணை, இளைஞர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


Crime: ஊர், ஊராக சென்று பாலியல் தொழில்.. போதையில் சிக்கிய தம்பதியினர்.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!


மாயமான இளம் ஆசிரியை! உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?