Crime: மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருமணத்தை மீறிய உறவு:


மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தாதிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரின் கணவர்  தியான் சிங் ராத்தோட். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்  ஜோதி அண்டை வீட்டில் இருக்கும் உதய் என்பவரிடம் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இவர்கள் அடிக்கடி வெளியே செல்லுவதும் நெருக்கமாக இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.


இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி  ஜோதி வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அண்டை வீட்டில் இருக்கும் உதய், ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு மாடிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். உடனே ஜோதி மாடிக்கு சென்றிருக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அவரது மகனும் மாடிக்கு வந்திருந்தான்.


3 வயது மகன் கொலை:


அங்கு ஜோதி மற்றும் உதய் ஆகியோரை பார்த்துக் கொண்டிருந்தான். மகன் வந்ததை அறிந்த ஜோதி  பயத்தில்  இருந்தார். இதனை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவான் என்ற பயத்தில் மகனை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 3 வயது சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  தனது மகனை ஜோதி கொலை செய்தார் என்பதை யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார். 


அப்போது, மகன் இறந்தபிறகு ஜோதியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்போதும் தன்னுடைய மகனின் ஆவி வீட்டைசுற்றி வருவதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அடிக்கடி மகன் கனவில் வருவதாக, ஜோதி தன்னுடைய கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.


மனைவியின் நடத்தையில் ரத்தோடுக்கு சந்தேகம் வந்தது.  ஒரு கட்டத்தில், மகனை நான் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று கூறி தன்னுடைய கணவரிடம் நடந்த உண்மையை அப்படியே தெரிவித்தார் ஜோதி. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் புகார் அளித்ததை அடுத்து, ஜோதியை போலீசார் கைது செய்தனர். திருமணம் மீறிய உறவுக்காக சொந்த மகனையே தாய் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


CM Stalin to PM Modi: சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு.. பிரதமர் மோடி விஷயம் தெரியாமல் பேசலாமா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி


ISL 2023-24 Schedule:செப்டம்பர் 21-ந் தேதி தொடங்குகிறது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா.. ரசிகர்களே இதோ அட்டவணை..!