Crime : உத்தர பிரசேதத்தில் பட்டப்பகலில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் பெண்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் மாணவிக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


மாணவிக்கு பாலியல் தொந்தரவு


உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் என்ற பகுதியில் ஐடிஐ அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த மாணவியை வகுப்பறை ஒன்றில் வலுக்கட்டாயமாக கட்டிப் பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், அந்த வகுப்பறையில் இருந்த மற்றொரு நபர் அந்த மாணவியை காப்பாற்ற முயன்றார். 


ஆனால், அந்த ஆசிரியர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். படிக்க செல்லும் பெண்ணுக்கு இதுபோன்று நடப்பது கொடூரமானது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஆசிரியர் கைது


இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக வைரலானதை அடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 






மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ”மாணவிக்கு இதுபோன்று நடந்தது வருதத்தை அளிக்கிறது. இது சம்பந்தமான வீடியோ வைரலானதை அடுத்து, 24 மணி நேரத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  ஆசிரியரை கைது செய்துள்ளோம். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.


பட்டப்பகலில் மாணவிக்கு, ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Bengaluru : 12ஆம் வகுப்பில் குறைந்த மார்க்: ஐ.டி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை... பெங்களூருவில் அதிர்ச்சி...!


Crime: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு