Crime : கொடைக்கானலில் காதலனை அடித்துக் கொலை செய்ததாக அவரது காதலி மற்றும் நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அடித்துக்கொலை:


தென்காசி மாவட்டம் சக்தி நகரை சேர்ந்தவர் அய்யாதுரை. அவருடைய மகன் சூர்யா ( 30). பிலிம் டெக்னாலஜி படித்துள்ள இவர், கொடைக்கானலில் சொந்தமாக தனக்கு ஒரு வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.


இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சூர்வையாவை கொலை செய்ததாக சென்னையைச் சேர்ந்த யோகா ஆசிரியை சுவேதா(25) மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, " கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுவேதா கொடைக்கானலுக்கு வந்துள்ளார். அப்போது, சூர்வையாவை காதலித்தார். சில நாட்களுக்கு பின்பு, சூர்வையாவின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து சென்னைக்கு வந்துள்ளார்.


டி.வி. பார்ப்பதில் தகராறு:


பின்பு, சூர்யாவுடன் பேச முடியாதபடி அவரது செல்போன் எண்ணை ப்ளாக் செய்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலை தேடி கொடைக்கானலுக்கு சுவேதா வந்துள்ளார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். அதன்பிறகு மீண்டும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


 இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி, கல்லுக்குழி பகுதியில் உள்ள சூர்யாவின் வீட்டில் இருவரும் இருந்தனர். அப்போது டி.வி.பார்ப்பதில், சுவேதாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சூர்யா, சுவேதாவை தாக்க முற்பட்டதாக தெரிவித்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக சுவேதா, தனது ஆண் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த ஆண் நண்பர்கள் 4 பேர், அவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இருவருக்குமான பிரச்சனையை தீர்த்து வைக்க நினைத்தனர். 


காதலி உள்பட 4 பேர் கைது:


அப்போது சண்டை தீவிரமானதால், சுவேதாவின் ஆண் நண்பர்கள் சூர்யாவை உருட்டுக் கட்டையால் தாக்கினார். மேலும் அவரை கால்களால் மிதித்தனர். இதில் சூர்யா மயங்கி விழுந்தார். இதனால் அவரை அங்குள்ள கட்டிலில் படுக்க வைத்தனர். பின்பு, சிறிது நேரம் கழித்தும் அவர் கண் திறக்கமால் இருந்ததால் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இவ்வாறு சுவேதா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்பு ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க


Crime : போலீஸ் உடை.. வாகன தணிக்கை... வசூல் வேட்டை.. போலீசையே அதிரவைத்த போலி எஸ்.ஐ கைது கதை தெரியுமா?


Children Rescued: சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் பாலியல் தொல்லை - 45 குழந்தைகள் மீட்பு..!