Crime: ’என்னை கிண்டல் செய்வியா..' ரூம் போட்டு காதலியை குத்திக் கொலை செய்த காதலன்.. கேரளாவில் பயங்கரம்..!

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஹோட்டலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஹோட்டலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தொடரும் கொடூரங்கள்:

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.  பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில், கேரளா மாநிலம் கொச்சியில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. 

உருவ கேலி செய்த காதலி:

கேரளா மாநிலம்  கேட்டயம் மாவட்டம் கங்கனார் சேரி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரவி-தங்கமா. இவர்களது மகள் ரேஷ்மா ரவி (27).  கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் (30).  இவர் கொச்சி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ரேஷ்மா ரவிக்கும் சமூக வலைதளங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இப்படி இருக்கும் நிலையில், ரேஷ்மா தனது நண்பர்களுடன் நவ்ஷாத்தை அறிமுகம் செய்து வைத்தார். சில நாட்களுக்கு கழித்து, ரேஷ்மா ரவியின் நண்பர்களை சந்தித்துள்ளார் நவ்ஷாத். அவர்கள் முன் உருவ கேலி செய்து கிண்டல் செய்தார் ரேஷ்மா.  இதோடு இல்லாமல் மற்ற நண்பர்களிடம் நவ்ஷாத்தை பற்றி உருவ கேலி செய்திருக்கிறார். இந்த விஷயம் நவ்ஷாத்திற்கு தெரிந்ததும் மன உளைச்சல் அடைந்ததுடன் கடும் கோபம் அடைந்தார்.

கொலை செய்த காதலன்:

இதுபோன்று தன்னை உருவ கேலி செய்வதை நிறுத்த வேண்டும் என்று ரேஷ்மாவை கண்டித்தார் நவ்ஷாத். இதனை கேட்காத ரேஷ்மா, மீண்டும் நவ்ஷாத்தை உருவ கேலி செய்து தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார்.  இதற்கிடையில், லிவ் இன் இருக்குமாறு நவ்ஷாத், ரேஷ்மாவிடம் அடிக்கடி கூறியுள்ளார். இதற்கு, தனக்கு விருப்பம் இல்லை என்று ரேஷ்மா கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து, சம்பவத்தன்று அதாவது நேற்று இரவு நவ்ஷாத் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு ரேஷ்மாவை வரச் சொல்லி இருக்கிறார். அங்கு உருவ கேலி செய்வது குறித்து நஷ்ஷாத் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் நடந்தது.  என்ன எப்படி கேலி செய்வ என்று கேட்டு ரேஷ்மாவை பலமுறை அடித்துள்ளார்.

குத்திக்கொலை:

இப்படி அடிப்பதற்கு பதிலாக என்னை கொலை செய்துவிடு என்று கூறிய ரேஷ்மாவை, அருகில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து, வயிறு மற்றும் பல இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார் நவ்ஷாத்.  பின்னர், ரேஷ்மாவை குத்தியதை தனது செல்போனில் படமாக எடுத்திருக்கிறார். பின்னர், இதுபற்றி ஹோட்டல் உரிமையாளரிடம் நவ்ஷாத் கூறியதை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்தனர். 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola