Crime: கர்நாடகாவில் வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் முக்கி எடுத்து தந்தையை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா(52). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு சுஹாசினி என்ற மகள் உள்ளார். இவர் அதை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரே மகள் என்பதால் அவரது தந்தை ஓம்கார் கவுடா அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார்.


இந்நிலையில், சுஹாசினி, தனது கல்லூரியில் படித்த வேறு ஜாதி இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் காதலித்து வந்தது அவரது வீட்டிற்கு தெரியவந்தது. இந்த விஷயத்தை அறிந்த தந்தை ஓம்கார் கவுடா, மகளை கண்டித்துள்ளார். ”வேறு ஜாதியை சேர்ந்த நபரை நமது உறவினர்கள் ஏற்க மாட்டார்கள்; எனவே இந்த காதல் வேண்டாம். அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிடு” என்று கூறியுள்ளார்.


ஆனால் சுஹாசினி அந்த இளைஞருடனான காதலை விடவில்லை எனக் கூறப்படுகிறது. தந்தை அறிவுரை கூறியும் சுஹாசினி காதலில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மகளிடம் இவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ஓம்கார் கவுடா ஆத்திரம் அடைந்தார். இனியும் விட்டால் தனது மகள் அந்த நபரை திருமணம் செய்துவிடுவார் என்ற நோக்கத்தில் கொலை செய்ய திட்டமிட்டார்.


அதன்படி, கல்லூரிக்கு வழக்கம் போல் சென்ற மகளை, திரைப்படம் பார்க்கலாம் என்று கூறி தியேட்டருக்கு அழைத்து சென்றார். தந்தை படத்துக்கு அழைத்ததால் சுஹாசினி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர்கள் தியேட்டருக்கு செல்வதற்கு முன்பே படம் திரையிடப்பட்டது. இதனால் அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு மகளுக்கு படிக்க தேவையான பொருட்களை எல்லாம் ஓம்கார் கவுடா வாங்கித் தந்துள்ளார். பின்பு நகை கடைக்கு அழைத்து சென்று தங்க மோதிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். 


இதன் தொடர்ச்சியாக அருகில் இருக்கும் ஒரு ஏரிக்கு மகளை, ஓம்கார் கவுடா அழைத்து சென்றார். அப்போது, மகளை திடீரென நீரில் தள்ளினார். சுஹாசினி தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார். இதனை பார்க்க முடியாத ஓம்கார் கவுடா அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளார். பின்பு அவரது தாய் சீதா மகள் காணவில்லை என பெல்லாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் பெல்லாரி போலீசார் விசாரணை செய்தனர். அதன்படி, தந்தை ஓம்கார் கவுடாவை கைது செய்தனர். வேறு ஜாதி நபரை காதலிக்க வேண்டாம் என பலமுறை கூறியும் கேட்காததால் மகளை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பின்பு உயிரிழந்த சுஹாசினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்தவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க


Chennai: சென்னையில் போலி வங்கிகள்.. தனி ராஜ்ஜியம் நடத்திய இளைஞர்.. சிக்கும் முக்கியப் புள்ளிகள் : பரபர பின்னணி!!


ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் கேரளா... ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க திட்டம்... அதிரடி காட்டும் பினராயி...!