Crime: விமானத்தில் பழக்கம்: பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் ஷையர் (47). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விமானத்தில் பயணிக்கும்போது,  அதே விமானத்தில் பெண் பயணி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் அந்த இளம்பெண்ணின் செல்போன் நம்பரை லட்சுமணன் கேட்டு வாங்கி உள்ளார். அதன்பின்னர்,  இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.  இதனை அடுத்து, இந்த வார தொடக்கத்தில் லட்சுமணம் கோவாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். பனாஜியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலையில் உள்ள அசான்ரா கிராமத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளார். அதே போல அந்த பெண்ணும் அந்த நேரத்தில் கோவாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.  

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு லட்சுமணன் தன்னை சந்திக்குபடி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அந்த பெண், எங்கு வரவேண்டும் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபரும் தங்கியுள்ள ஹோட்டல் பெயரை சொல்லி வரும்புடி கூறியிருக்கிறார். லட்சுமணம் பேச்சை கேட்ட  இளம்பெண், அவர் தங்கியுள்ள இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பெண்ணை தன் அறைக்கு அழைத்து சென்ற லட்சுமணன், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனை அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனக்கு நடந்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேடி வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்த லட்சுமணனை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது விவரத்தை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்று நடப்பது இதுமுதல் முறையல்ல. சமீபத்தில் கூட, தெலங்கானாவில் 15 வயது சிறுமியை வீடு புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிறுமியுடன் இருந்த சகோதரன் மற்றும் நண்பர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola