திருச்சி மாநகரில் போதைப்பொருள்களுக்கு மாணவ, மாணவிகள் அடிமையாகி பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொழிலில் அதிக அளவில் மாணவிகள் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் கல்லூரி, மாணவ, மாணவிகள் படிக்கும் காலத்தில் வாழ்க்கையை சீரழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, கல்லூரியின் உட்பகுதியிலேயே தனித்தனியாக விடுதிகள் உள்ளது. பல்கலை.யின் உட்பகுதியில் அடர்ந்த மரங்கள் ஆங்காங்கே இருப்பதால் அடிக்கடி மாணவ, மாணவிகள் செக்ஸில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பின்பு  நாளடைவில் இது அவர்களுக்கு பழகியதால்  செக்ஸில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ‘‘குரூப் செக்ஸ்’’ என்ற இலக்கை நோக்கி செல்ல தொடங்கியதாக தகவல்கள் கூறபடுகிறது.





மேலும் இதுபற்றி பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினமும் இரவு 10 மணிக்கு மேல், வெவ்வேறு வகுப்புகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியின் காவலர்களுக்கு பணம் கொடுத்து, வெளியே செல்கின்றனர். அவ்வாறு வெளியே வரும் மாணவ, மாணவிகள் திருச்சி அருகே பிரபல ஓட்டலுக்கு சென்று உணவு அருந்துகின்றனர். பின்னர் மொத்தமாக ஒரே நபர் ‘பில்’ செட்டில் பண்ணுவார். அடுத்தடுத்த நாட்களில் பில் செட்டில் பண்ணக்கூடிய நபர் மாறுவது வழக்கம். தொடர்ந்து, அவர்கள் பிரபல ஓட்டலுக்கு சென்று ஒரே அறையில் தங்கி பாலியல் சேட்டைகளை’ ஆரம்பிப்பார்கள் என்றனர். முக்கியமாக, ஒன்றாக வந்துள்ள சில மாணவ, மாணவிகளுக்கு முன்பு பழக்கம் இருக்காது என்பதால் தொடர்ந்து, நன்றாக பழகும் வரை சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஒரே அறையில் இதுபோன்ற சில்மிஷத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் ஈடுபடுவார்கள். இதில் அனைவரும் நன்றாக பழகிய பிறகு கஞ்சா, போதை மாத்திரைகளை அவர்கள் பயன்படுத்துவார்கள். பின்னர், அவர்கள் எந்த நாளில், ஒன்றாக இணைந்து குரூப் செக்ஸில் ஈடுபட வேண்டும் என தேதியை குறிக்கின்றனர். சில மாணவிகள் ஒத்துழைக்க மாட்டார்கள். அந்த மாணவிகளுக்கு போதை பொருட்களை அதிகளவு கொடுத்து, காம வலையில் வீழ்த்துவதற்கான அனைத்து வேலைகளும் பழகிய மாணவிகள் மூலம் முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவித்தனர். 




பின்னர், அந்த ஓட்டலில் பெரிய அளவிலான அறையை எடுத்து, குரூப் செக்ஸில் ஈடுபட மாணவ, மாணவிகள் முடிவு செய்கின்றனர். எடுத்தவுடன் குரூப் செக்ஸில் ஈடுபட மாட்டார்கள். முதலில், சிறிய அளவில் போதையை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து, நடனம் மேற்கொள்வார்கள். பின்னர், காம சேட்டைகளை ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து, ஒரே அறையில் ஜோடிகள் அருகருகிலேயே பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். மாணவிகள் சம்மதத்துடன் இதுபோன்ற காமலீலைகள் நடப்பதால், பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் உள்ளது என்றனர். குரூப் செக்ஸில் பல ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தால், ‘பணத்தால்’ அதை அடக்கி விடுகின்றனர். பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள், அந்த வகையில் செக்ஸில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி இவர்கள் சென்றுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

மேலும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் செக்ஸில் இந்தளவுக்கு செல்வதற்கு முக்கிய காரணம் போதைக்கு அடிமையானது தான். பல ஆண்டுகளாக அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் சந்தோஷத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நாளடைவில் போதை இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாத நிலைமைக்கு சென்று விடுகின்றனர். போதை தலைக்கேறியதும், பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது என்பதுதான் வேதனையின் உச்சக்கட்டம். குரூப் செக்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதால், செக்ஸில் விநோத முறைகளை கடைபிடித்து சீரழிந்து வருகின்றனர் என்று பல்கலைக்கழக வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர்.