கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மீது ஆசிரியர் சூடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுடுதண்ணீர் ஊற்றியதால் மாணவர் உடல் 40% எரிந்தது.

Continues below advertisement

வெந்நீர் ஊற்றிய ஆசிரியை

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்தது. சுடுதண்ணீர் ஊற்றப்பட்ட பிறகு அகித், லிங்கசகுரு தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. சிறுவன் தனது சீருடையில் மலம் கழித்திருப்பதைக் கண்டுபிடித்த ஆசிரியரான ஹுலிஜெபா கோபமாக அவர் மீது சூடான தண்ணீரை ஊற்றியுள்ளார்.

Continues below advertisement

சிறுவனின் குடும்பத்திற்கு மிரட்டல்

இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததற்காக சிறுவனின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அகித்தின் பெற்றோருக்கு உள்ளூர் தலைவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும் அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: உயர்ந்தது மின்கட்டணம்! எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு விலை உயர்வு தெரியுமா? முழு விவரம்!

ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை

இதற்கிடையில், புகார் அளிக்கப்படாவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வருகை தரவில்லை என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இந்த விஷயத்தை விசாரிக்க அதிகாரிகள் சிரத்தை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.

வீட்டுப்பாடம் செய்யாததால் அடித்த ஆசிரியர்

செப்டம்பர் 2 ஆம் தேதி, இதேபோன்ற நிகழ்வு டெல்லியில் பதிவாகியுள்ளது. வடமேற்கு டெல்லியில் வீட்டுப்பாடம் முடிக்காததற்காக இரண்டு சிறிய சகோதரிகளை தாக்கியதாக ஒரு ட்யூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​புகார் அளித்தவர் தனது மூன்று மகள்களும் முகுந்த்பூரில் உள்ள ‘குல்தீப் சர் டியூஷன் கிளாஸ்’ க்குச் செல்கிறார் என்றார். ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, புதன்கிழமை தனது இரண்டு மகள்கள் வீடு திரும்பியபோது, ​​அவர்கள் இருவருக்கும் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டதற்கான குறிகள் இருந்தன என்று கூறினார். அவர்கள் இருவரையும் ஆசிரியர் குல்தீப் தாக்கியதாகக் கூறினர். இரு குழந்தைகளின் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன, புகார்தாரரின் அறிக்கையின் அடிப்படையில், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குல்தீப் கைது செய்யப்பட்டார். வடகிழக்கு டெல்லியில் தங்கள் வீட்டுப்பாடத்தை முடிக்காததற்காக, ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறுமிகளை ஆசிரியர் தாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையம் (டி.சி.டபிள்யூ) தலைவர் சுவதி மாலிவால் குற்றம் சாட்டியிருந்தார்.