மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சிறையில் முதல் தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையின்போது  சாப்பிட வந்த சிறைவாசிகள் இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.








 

அப்போது சிறைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய சிறைவாசிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்தியதோடு, சிறைச்சாலையில் சுவர்களில் ஏறிநின்று கற்களை சாலைகளை நோக்கி வீசி எறிந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து சிறைத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர்  கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைத்துறை காவலர்கள் அழைத்துசென்று சிறையில் அடைத்தனர்.




 

மேலும் மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறைவளாக மருத்துவர் மூலமாக சிகிச்சை அளித்துவருகின்றனர். மதுரை மத்திய சிறையில் 2019- ம் ஆண்டு சிறைவாசிகள் அடிப்படை வசதிகள் கோரி சிறைவாசிகள் சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறை வளாகத்திலயே சிறைவாசிகள் பாட்டில்கள், கற்களை எறிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைவாசிகள் மோதலை தொடர்ந்து சிறை வாளகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாரளமாக கிடைக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் சிறைக்குள் இவ்வாறு சண்டை போட்டுக்கொள்ளும் கைதிகளை வெவ்வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்” என்றனர்.