பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிறுமிக்கு நீண்ட ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  பாண்டியராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வில்லிவாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


அந்தப் பெண் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரும் பாண்டியராஜும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி அந்த வீட்டிற்கு செல்லும் போது பாண்டியராஜ் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 


தற்போது அந்தச் சிறுமி வளர்ந்து கல்லூரி படித்து வருகிறார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனினும் பாண்டியராஜ் இப்போதும் அந்தப் பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்லும்போது பாலியல் தொந்தரவு அளித்துவந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் தாயும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


 


அந்தப் புகாரில் சிறு வயதில் பாண்டியராஜ் பல முறை அந்தப் பெண்ணை மிரட்டி பாலிய வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் அந்த காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் பாண்டியராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியாக இருக்கும் போது முதல் பெண் ஒருவருக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றிய உறவினர்:


14 வயது சிறுமியை அவரது தாய் வழி மாமா பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் இந்த 14 வயது சிறுமி நேற்று முன் தினம் (செப். 05) இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றுள்ளார்.


இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் அந்நபர் ஊற்றியுள்ளார்.


தொடர்ந்து சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.




மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றி, கத்தியால் தொண்டையைக் கிழித்த உறவினர்!