திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015 நவம்பரில் ரூ.1.35 கோடி, 2018 மார்ச்சில் ரூ.35 லட்சம், 2018 செப்டம்பரில் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.


இதையடுத்து சீரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் வருகிற 10-ந்தேதி இரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மாதமே இந்த பாலத்தை சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்தது. எனவேதான் இந்தப்பணி அப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.


மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவுள்ளதையொட்டி, இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகுமானதால், காவேரி பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகின்ற10 தேதி சனி கிழமை இரவு 12 மணி முதல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவேரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒயாமரி வழியாக ( காவிரி தென்கரை சாலை) பழைய பாலத்தின் வழியாக சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணம்தான் சாலை ( காவிரி இடது கரைச்சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏரி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.


இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து இடது புறம் உள்ள திருவானைக்காவல் கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவணக்காவல் கோவில் வந்துடைந்து வலது புறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணம் தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை ( சென்னை -திருச்சி திண்டுக்கல் -சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலது புறம் திரும்பி ஒயாமரி வழியாக (காவிரி தென்கரைச் சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.




மேலும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச் சாலை வழியாக சஞ்சீவி  நகர், மார்க்கமாக காவேரி புது பாலம் வழியாக நம்பர் 1  டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் நம்பர் 1 டோல்கேட் அடைந்து காவேரி புது பாலம் வழியாக வந்து புரவலச் சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவேரிபாளையத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஒயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவேரி பழைய பாலத்தில் சென்று நேராக நம்பர் 1  டோல்கேட் சென்று செல்லலாம்.  காவேரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை ஒட்டி மேற்கண்ட மாற்று பாதையில் பயணம் செய்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.