கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். கடந்த 3ம் தேதி கங்கை அம்மன் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அந்த கோயிலின் பூசாரியான 55 வயது சந்திர சேகர், உங்களுடைய 15 வயது மகளுக்கு திருஷ்டி நிறைய இருக்கிறது.


அதற்காக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனவே, 15 நாள் உங்கள் வீட்டில் தங்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய சுமதி மற்றும் அவரது குடும்பதார் அவரை தனது வீட்டில் தங்க வைத்தார். அப்போது அவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த சுமதி தனது கணவருடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார்.


இப்புகாரின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் பூசாரியை கைது செய்ய சென்றனர். இதையடுத்து, அவர் தப்பிச்சென்றார். எனவே, போலீசார் பூசாரியை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் மதுரவாயல் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 




இதேபோல், திண்டிவனம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த உப்பு வேலுாரைச் சேர்ந்த ஏழுமலை மகன் 20 வயதான பிரேம் குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் திருமணமான பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்தாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஆறு மாதத்திற்கும் மேலாக அப்பெண்ணின், 6 வயது சிறுமிக்கு பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அப்பெண்ணும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதையறிந்த பகுதி மக்கள், சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். அவர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, பிரேம்குமார் மீது, 'போக்சோ' சட்டத்தின் வழக்குப்பதிந்து கைது செய்தனர். 


போக்சோ சட்டம் : 


கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.


18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை 

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண