சென்னை, மதுரவாயல் அடுத்து அமைந்துள்ளது ஆலப்பாக்கம். இங்குள்ள கோவிந்தப்பன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். அவருக்கு வயது 59. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி வசந்தா மதுரவாயல் போலீசாருக்கு உடனே தகவல் அளித்தார். வசந்தா அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் ராஜேந்திரனின் கழுத்தை யாரோ கயிற்றால் இறுக்கியதாக தெரியவந்துள்ளது.




இதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ராஜேந்திரன் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவரது குடும்பத்தினர் முன்னுக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனால், தீவிர சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


அவர்களின் விசாரணையின் அடிப்படையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.


ராஜேந்திரன் நடவடிக்கையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவரது குடும்பத்தினர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, அவரது மகள் ராஜேஸ்வரி மற்றும் மருமகன் பிரதாப் ஆகிய மூன்று பேரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்துள்ளனர்.




வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், மதுபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனே ராஜேந்திரனை கொலை செய்ய தயாராக இருந்த வசந்தாவும், பிரதாப்பும் தாங்கள் தயாராக வைத்திருந்த கயிற்றால் ராஜேந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், ராஜேந்திரனின் உடலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டது போல தொங்கவிட்டுள்ளனர்.


ராஜேந்திரனை மனைவி வசந்தாவும், மருமகள் பிரதாப்பும் கொலை செய்தபோது அவரது மகள் ராஜேஸ்வரி யாரும் உள்ளே வராதபடி காவல் காத்து நின்றுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மருமகனும் கொலை செய்ய மகள் காவல் காத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண