செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் பெண் நீதிபதி வீட்டில் 207 சவரன் நகை கொள்ளையடித்த செவிலியர் மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் மதுரகவி (85). இவர் கடந்த மே 6-ம்தேதி தனது வீட்டிலிருந்த தங்க நகைகளைச் சரிபார்த்த போது அதில், 207 பவுன் நகைகள் மற்றும் ரூ.50,000 காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மதுரகவியின் மனைவிக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவி (32) என்ற செவிலியர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

 

புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், மதுரகவியின் மனைவிக்கு வீட்டிலே மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக, சில நாட்களுக்கு முன் பணியமர்த்தப்பட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த செவிலியரான தேவி, நகைகள் மற்றும் பணத்தை திருடி அவரது நண்பரான ஜெகநாதனிடம் கொடுத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்த போலீசார், புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த நகைகளை விட கூடுதலாக கொள்ளையடித்த நகைகளையும், 34 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.