சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்முறை 50 வயது மனநலம் குன்றிய பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆவடியை அடுத்த திருநின்றவூரில் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய பெண் ஒருவர் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பெண்ணை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திருநின்றவூரில் புதிதாக வீடு கட்டி வரும் பச்சையப்பன் என்பவரிடம் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் தான் புதிதாக கட்டிவரும் வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 




இதன்பின்னர் காவல்துறையினர் பச்சையப்பன் என்பவரின் புதிய வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பெண் இறந்து சடலமாக இருந்துள்ளார். அந்தப் பெண் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அவர் காணாமல் போன மனநலம் குன்றிய பெண்தான் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் அந்தப் பெண்ணை ஒரு தூய்மை பணியாளர் பச்சையப்பனின் வீட்டிற்குள் அழைத்து வருவதுபோல காட்சிகள் பதிவாகி இருந்தது.


இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அந்த நபரை தேடி பிடித்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் சக்திவேல் (29) என்பதும் அவர் ஒரு தூய்மை பணியாளர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக அந்த வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்போது அந்த பெண் அலறியதை தொடர்ந்து அவருடைய தலையை சுவரில் இடித்து கொலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 50 வயது பெண்ணை 29 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: சென்னையில், வாடகைக்கு வீடு எடுத்து மகளின் தோழியை அடைத்து வைத்து பாலியல் கொடுமை.. சிக்கிய கொடூரன்!