இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குவது கோவா. இங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களை காட்டிலும் வெளிநாட்டினர் அதிகளவில் சுற்றுலா வருவார்கள். வெளிநாட்டினர் வசதிக்காக கோவாவில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளது. வடக்கு கோவாவில் அமைந்துள்ள ஆரம்போலில் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது.


இந்த விடுதியில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அந்த ரஷ்ய பெண் தனது மகளை விடுதியிலே விட்டுவிட்டு அருகே உள்ள சூப்பர்மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.




அப்போது, அவரது 12 வயது மகள் அருகே இருந்த நீச்சல்குளத்தின் அருகே இருந்துள்ளார். அந்த விடுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த விக்ரம் நாயக் என்ற 28 வயதான இளைஞர் இருந்துள்ளார். அவர் 12 வயது ரஷ்ய சிறுமி தனியாக இருப்பதை அறிந்து, அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


விடுதிக்கு திரும்பிய தாய் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அங்கே அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விக்ரம் நாயக் அவரது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.




இதையடுத்து, விக்ரம் நாயக்கின் சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள கட்காக்கிற்கு போலீசார் விரைந்துள்ளனர்.  அங்கு பதுங்கியிருந்த விக்ரம் நாயக்கை உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் கைது செய்தனர். இதையடுத்து, விக்ரம் நாயக் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Delhi High court: பாலியல் உறவு.. கணவரும்.. அந்நியரும் ஒன்றா? கடும் விமர்சனத்துக்கு உள்ளான நீதிபதியின் கருத்து!


Watch Video: ’’என் அப்பாவுக்காக..’’ சிறுமி சொன்ன ஒற்றை பதில்.. பேசமுடியாமல் கண்கலங்கிய பிரதமர் மோடி!!








 



Tags:chennaiGoldsilverprice