கோயில் திருவிழாவில் நிர்வாணம் நடத்திய நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பங்கலா கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் நடத்திய 10 பேரை ஆந்திர மாநில போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. 


வைரலான வீடியோவின் அடிப்படையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தால்ரேவு மண்டலத்தின் உப்பங்களா கிராமத்தில் பொலேறுஅம்மா திருவிழாவில் நிர்வாண நடனம் ஏற்பாடு செய்ததற்காக 10 பேர் கொரிங்கா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்று தங்களுக்குத் தெரியாது என்றும் விரைவில் அனைத்து விவரங்களையும் பெறுவோம் எனவும் காவல்துறை கூறியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண