கோவை: காதலுக்கு எதிர்ப்பு! மகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர தாய்!

பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில், குமார் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார். 

Continues below advertisement

கோவையில் மாற்று சமூக பெண்ணை காதலித்த மகனை ஆத்திரத்தில் தாய் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் அருகேயுள்ள சுக்ரவார்பேட்டையில் குழந்தைவேல் என்பவர் தனது மனைவி ராணி, மகன் குமார் ஆகியோரோடு வசித்து வந்தார். இதனிடையே குமாருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பெண் பார்த்து வந்த நிலையில், குமார் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார். 


இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பெண் யார் என கேட்டுள்ளனர். அப்போது காதல் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்ததால் குமாரின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அடிக்கடி அவருக்கும், அம்மா ராணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சில நாட்களாகவே பேசிக் கொள்ளவேயில்லை  அந்த வகையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் வெளியே சென்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளார். 

அப்போது காதலியுடன் அவர் போனில் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த ராணிக்கு குமாரின் இந்த செயல் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் வீட்டில் இருந்த மண்ணென்ணெயை ஊற்றி திடீரென தீ வைத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட குமார் தன் மீது பரவிய தீயை அணைத்தார். ஆனால் அவரது வாய், முகம் ஆகிய வற்றியில் தீக்காயம் ஏற்பட்டது. 

சென்னை: டாட்டூ கலைஞர் டூ வழிப்பறி கொள்ளையன்...காதலியுடன் ஜோடியாக கொள்ளையில் இறங்கிய காதலன்!

போதையில் இருந்ததால் குமாருக்கு மறுநாள் தான் தீக்காயத்தின் வலி தெரிந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் குமாரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு ராணி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் விவகாரத்தில் பெற்ற மகனையே தாய் கொல்ல முயன்ற சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola