திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் கடந்த 30ஆம் தேதி தெருவில் உள்ள நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செய்யாறு பகுதி பெரியார் நகரை சேர்ந்த மணல் அள்ளும் தொழிலாளியான அருள் வயது (45) என்பவர் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்பிள்ளை ஒரு ஒரு மகன் உள்ளனர் மற்றும் அருள் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும். அப்போது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி உன்னுடைய பெற்றோர் எங்கே என கேட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாதை சுதாரித்துக்கொண்டு சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அருள் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அருள் சிறுமியிடம் நீ 'கூச்சலிட்டால் உன்னை கொன்று விடுவேன், என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியிடம் இங்கு நடந்ததை நீ யாரிடமும் சொல்லக்கூடாது' என அருள் மிரட்டியுள்ளார்.  வெளியே சென்ற சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது சிறுமி தாயிடம் வயிறு வலிப்பதாக கூறியும் இதனால் சிறுமி உடல் நிலை பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறுமி சோர்வாக இருந்துள்ளதை கண்டு அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.


அப்போது, சிறுமி நடந்த விஷயங்களை கூறி கதறி அழுதார். இதைக் கேட்ட  அதிர்ச்சியடைந்த அவரது தாய், கணவரிடம் தொலைபேசியின் மூலம் தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு தகவலை அறிந்து வீட்டிற்கு வந்த தந்தை சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி வன்கொடுமை செய்யப்படதை செய்யார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து மருத்துமனைக்கு சென்றனர்.




அதன் பின்னர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அருளை வீட்டிற்கு சென்று காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார் அருள் அதன்பேரில் ஆய்வாளர் நந்தினிதேவி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வன்கொடுமை செய்த அருளை கைது செய்து, செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிக்கன் சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய்,மகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்! Kovilpatti Death