தென்காசி மாவட்டம் திருவேங்கடம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் ரகுபதி (61). தொழிலதிபரான இவர் திருவேங்கடத்தில் மெடிக்கல் மற்றும் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.  திருவேங்கடம் அருகே உள்ள குண்டம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் துளசி மணி. இவரது மனைவி மகேஷ்வரி(43). இவர் தொழிலதிபரான ரகுபதி வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மகேஷ்வரி மீதுள்ள நம்பிக்கையில் அவரிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு ரகுபதி தனது குடும்பத்துடன் வெளியூர் செல்வது வழக்கம்.




இந்த நிலையில் நேற்று ரகுபதியின் மனைவி பீரோவை திறந்து  நகைகளை பார்த்த போது நகைகள் காணாமல் போயிள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக நகைகள் மாயமானது குறித்து ரகுபதி மகேஷ்வரியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நகையை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்படி சங்கரன்கோவில் துணை போலிஸ் சூப்பிரண்டு கதிர் உத்தரவின் பேரில் திருவேங்கடம்  இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் ஆலோசனையின் படி சப் - இன்ஸ்பெக்டர்கள் சூசை பாண்டியன், தாமரைலிங்கம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர், அப்போது மகேஸ்வரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணிப்பெண் மகேஸ்வரி தனது கணவர் துளசிமணியுடன் சேர்ந்து திட்டம் தீட்டி நகைகளை கொள்ளையடித்தாக ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர் மகேஸ்வரியின் வீட்டில் இருந்து நகைகளை மீட்ட போலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரி, அவரது கணவர் துளசிமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  5 ஆண்டுகள் வேலை பார்த்த  நிலையில் நம்பிக்கையுடன் வீட்டிற்குள் அனுமதித்தவர்களுக்கு பணிப்பெண் நம்பிக்கை துரோகம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண