கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரப்பா. 50 வயதான அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டபோது சமூக வலைதளத்தில் வைரலானார். 


இவர்களது திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டது. 90ஸ் கிட்ஸ்களின் வருத்ததற்கு ஆளான சங்கரப்பா, தனது இளம் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார். மனைவியின் ஆசைக்கு இணங்க இன்ஸ்டாகிராமில் டூயட் பாடி கொண்டு, வீடியோக்கள் பதிவிட்டு கொண்டு இருந்துள்ளார்.


அதனை அடுத்து, அவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நாய் வளர்ப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்கிறார் சங்கரப்பா. இதனால், சோகமான மனைவி சங்கரப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் சண்டை பெரிதாகியுள்ளது. 



மனைவியின் பேச்சால் மனமுடைந்த சங்கரப்பா வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இதனால், அவரைத் தேடி அவரது மனைவியும், உறவினர்களும் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் ஆண் சடலம் கிடைத்துள்ளது.  அங்கே இருந்த பலா மரத்தில் சங்கரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், குடும்ப பிரச்னை காரணமாகதான் சங்கரப்பா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து உள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண