நெல்லை மாவட்டம் நாங்குநேரி சோதனை சாவடியில் நாங்குநேரி  இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 பேர் இருந்த நிலையில் போலிசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், 






புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் அலாவுதீன் (39) உள்பட நான்கு பேர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த நிலையில் அதில் அவர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அலாவுதீன் தனது ஆசன வாய் பகுதியில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்த பாஸ்போர்ட்டுகளையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் அங்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் அலாவுதீன் உள்பட 4 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர்.




மேலும் துபாயிலிருந்து திருவனந்தபுரம் விமானநிலையம் வழியாக இந்தியாவுக்கு வரும் போது தங்கத்தை கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையில் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி தங்க கடத்தல் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கும்பலில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் நாங்குநேரியில் பிடிபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண