திருச்சி, காட்டூர் குறிஞ்சி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ்குமார், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (வயது 36). இவர்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ்குமாரிடம் மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும் ராதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ராதா தனது 10 வயது மகளுடன் மண்ணச்சநல்லூர் பி.எஸ்.ஏ நகரில் மணிகண்டனுடன் குடும்ப நடத்தி வந்ததாக தெரிகிறது. இதை கணவர் சுரேஷ் ராஜ்குமார் நேரில் பார்த்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்பக்கம் தாழ்பாள்போட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






இதேபோல் மற்றொரு சம்பவம் காடுவெட்டி ஊராட்சி கீழவழி காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (60). புற்றுநோயால் அவதி அடைந்து வந்த அவர் சம்பவத்தன்று பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.