மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 323.95 அல்லது 0.36% புள்ளிகள் சரிந்து 81,042.42 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 130.50 அல்லது 0.56% புள்ளிகள் சரிந்து 24,663.20 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 


கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அடுத்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நிஃப்டி முதன்முறையாக 24,700 புள்ளிகளில் கடந்து புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 81,385 புள்ளிகளை தொட்டு வரலாற்று உச்சம் தொட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஐ.டி. பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில், இன்றைக்கு சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., ஏசியன் பெயின்ட்ஸ், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டி.சி.எஸ். டாடா கான்ஸ் ப்ராட், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


 பி.பி. சி.எல்., டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரான் ஜெ.எஸ்.டபுள்யூ, விப்ரோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பவர்கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹீரோ மோட்டர்கார்ப், அப்பல்லோ மருத்துவம்னை, பஜாஜ் ஃபினான்ஸ்,டாடா மோட்டர்ஸ், நிலையன்ஸ், பாரதி ஏர்டெல், என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், க்ரேசியம், எம்& எம், அதானி போர்ட்ஸ், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மஹிந்திரா, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.


நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  81 ஆயிரம் புள்ளிகளை கடந்து வரலாற்று புதிய சாதனை படைத்தது. இன்றைக்கும் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.