Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  50.11 அல்லது  0.08% புள்ளிகள் குறைந்து 60,297.98 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 5.80 அல்லது 0.03% புள்ளிகள் குறைந்து 17,746.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  இந்த வாரத்தில் 2வது நாளாக இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது. வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லாபம்-நஷ்டம்


அதானி போர்ட்ஸ், எம்எம், ரிலையன்ஸ், டிசிஎஸ், சன் பார்மா,  டாடா கான்ஸ், பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்சர்வ், நெஸ்டிலே, எச்டிஎஃப்சி லைப், கோல் இந்தியா, எஸ்பிஐ, பிபிசிஎல், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


பாரதி ஏர்டெல், அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், லார்சன், ஆக்சிஸ் வங்கி, சிப்ளா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசிகி, ஹின்டல்கோ, கிராசிம், அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.