Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்  579.56 அல்லது 1.00% புள்ளிகள் உயர்ந்து 58,539.65 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 165.60 அல்லது 0.97% புள்ளிகள் உயர்ந்து 17,246.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  நீண்ட நாட்களுக்கு பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு  மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது.


லாபம்-நஷ்டம்


ரிலையன்ஸ், எச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, நெஸ்டீலே, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, எம்எம், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஹின்டல்கோ, இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், சிப்ளா, ஹிரோ மோட்டோகோர்ப், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், கிராசிம், மாருதி சுசிகி, லார்சன், கோல் இந்தியா, டைட்டன் கம்பெணி, கோடக் மகேந்திரா, சன் பார்மா, பாரதி ஏர்டெல்  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


ஐடிசி, பிரிட்டானியா, அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.