Share Market opened  : இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 444.53 புள்ளிகள் சரிந்து 62,390.07 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 123.15 புள்ளிகள் சரிந்து 18,577.90 புள்ளிகளாக உள்ளது. 






லாபம்-நஷ்டம்


ஹின்டல்கோ, எச்சிஎல் டெக்,டிசிஎஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹிரோ மோட்டோகோர்ப், இன்ஃபோசிஸ், சன் பார்மா, லார்சன், நெஸ்டீலே, ரிலையன்ஸ், யுபிஎல், பாரதி எர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்ஃசி, டாடா மோட்டார்ஸ், அப்போலா மருத்துவமனை, கோடக் மகேந்திரா, பிரிட்டானியா, பிபிசிஎல், மாருதி சுசிகி, டெட்டன் கம்பெனி, சிப்ளா, எம்எம், அதானி போர்ட்ஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள்  சரிவை கண்டுள்ளன.


எஸ்பிஐ லைப், எச்டிஎஃப்சி லைப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோல்இந்தியா, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


வட்டி அளவு உயருமா?


கடந்த வாரம் ஏற்றத்துடன் இருந்த பங்குச்சந்தையானது,  இந்த வாரம் இரண்டு நாட்களும் மந்தையாக இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி நாளை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் என்ன விதமான முடிவு எடுக்கப்படும், வட்டி எந்த அளவு உயர்த்தப்படும் என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது. 


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.


ரூபாய் மதிப்பு:






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 24 காசுகள் குறைந்து 82.09 ரூபாயாக ஆக உள்ளது.