மார்ச்,31 ஞாயிறு அன்று பொதுத் துறை (ஏஜென்சி) வங்கிகள் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


2023-2024 ம் நிதியாண்டில் கடைசி நாளான மார்ச்,31,2024 அன்று ரிசர்வ் வங்கியின் ஏஜென்சி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளின் அனைத்து கிளைகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


நடப்பாண்டின் வருமான வரி உள்ளிட்ட பிற வரி செலுத்தும் விசயங்களுக்கா இம்மாதம், 31-ம் தேதி வங்கிகள் இயக்கும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வழக்கமாக, ஞாயிறு அன்று பொது விடுமுறை. ஆனால், இந்த முறை வருமனா வரி துறை தொடர்பான பணிகள் முடிக்க வேண்டியுள்ளதால் மார்ச்-31 வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. அரசு சார்ந்தா அலுவல் பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் பொதுத் துறை வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.


 இதன்படி,பொதுத் துறை வங்கிகள், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இஎதியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் ஞாயிறுயன்று செயல்படும். 


முன்னதாக, வருமான வரி துறை மார்ச், 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களும் தொடர் விடுமுறையை ரத்து செய்திருந்தது. மார்ச் 29- புனித வெள்ளி நாள். அடுத்த நாள் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை. நிதியாண்டிற்குள் அலுவல் பணிகளை முடிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் மூன்று நாள் விடுமுறையும் வருமான வரி துறை ரத்து செய்திருந்தது.