சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.


அதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்து ரூ.93.38க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 31 காசு அதிகரித்து ரூ.86.96க்கும் விற்பனையானது.





இந்நிலையில், மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசு அதிகரித்து ரூ.93.84க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 24 காசு அதிகரித்து  ரூ.87.49க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசு அதிகரித்து ரூ.94.09க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை 32 காசு அதிகரித்து ரூ.87.81க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தன.


தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.


கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திமுக ஆட்சிக்கு வந்தது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு திமுக அறிக்கையில் அறிவித்ததுபோல, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.