PF New Rule: EPFO ​​பங்கேற்பிலிருந்து முன்னர் விலக்கப்பட்ட நிறுவனங்களை அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதிய நிதிகளுக்கு மாறுவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.


பண எடுப்பு வரம்பு ரூ.1 லட்சம் ஆக அதிகரிப்பு:


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்கள் இனி அவசர காலங்களில் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மத்திய அரசு, ஊழியர்களுக்கு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ​​பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்காக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம். முன்னதாக ரூ. 50,000 வரம்பாக இருந்த நிலையில், தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்த இந்த விதியை,  மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.


ஆறு மாதங்களிலேயே பணத்தை பெறலாம்..!


EPFO ​​ஐ மிகவும் வசதியாகவும் பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான பரந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த முக்கியமான மாற்றத்தால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். தற்போது பணிபுரிந்து 6 மாதங்கள் முடிவடையாத புதிய ஊழியர்கள் கூட, இப்போது PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். இந்த வசதியும் கடந்த காலத்தில் இல்லை. இந்த புதிய விதியானது, திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் பணியாளர்களை எந்தவித நிதிப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாக்கும்.


பி.எஃப்., வட்டி விகிதம்:


ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பில் EPFO ​​ஒரு முக்கிய பகுதியாகும். 2023-24 நிதியாண்டிற்கான PF கணக்குகளுக்கு அரசாங்கம் 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது (PF வட்டி விகிதம் 2023-24). இந்த வட்டி விகிதம் நடுத்தர வர்க்க ஊதியம் பெறுபவர்களுக்கு முக்கியமானது. ஏனெனில், அது பயனாளர்களின் வாழ்நாள் சேமிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


பழைய நிறுவனங்களும் EPFO-ன் வரம்புக்குள் வர வாய்ப்பு:


மற்றொரு முக்கிய சீர்திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது அரசு. முன்னதாக, EPFO ​​கூட்டாண்மையிலிருந்து விலக்கப்பட்ட நிறுவனங்களை பொதுத்துறை 'ஓய்வு நிதி மேலாளர்களுக்கு' மாற்ற அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் முக்கியமாக 1954 இல் EPFO ​​உருவாவதற்கு முந்தைய ஓய்வூதியத் திட்டங்களாகும். அந்த நிறுவனங்கள் இப்போது EPFO ​​இன் கீழ் வரும் விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.


தற்போது, ​​இதுபோன்ற 17 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள், ரூ. 1,000 கோடி கார்பஸ் செய்கின்றனர். அந்த நிறுவனங்கள் விரும்பினால் EPFO-ன் கீழ் வர அரசாங்கம் அனுமதிக்கும். இதன் காரணமாக, அந்த ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வடிவத்தில் சிறந்த மற்றும் நிலையான வருமானத்தைப் பெறுவார்கள். தற்போது, ​​ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பி.எஃப்., கணக்கிற்கு பங்களிக்க வேண்டும்.  அனால், அந்த வரம்பை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.