சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்த நிலையில், பிற்பகலில் மேலும் 1,320 ரூபாய் விலை உயர்ந்து மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இதன் மூலம், தங்கத்தின் விலை கிராம் 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதேபோல், காலையில் விலை உயராத நிலையில், பிற்பகலில் வெள்ளியின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

ரூ.1,15,000-த்தை கடந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி, விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,290 என்ற உச்ச விலையையும், ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்ச விலையாக, 1,06,320 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 16-ம் தேதி கிராமிற்கு 60 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,05,840 ருபாய்க்கும் விற்கப்பட்டது.

பின்னர், வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 17-ம் தேதி மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்று, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 18-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 19-ம் தேதி மேலும் அதிரடியாக விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் 13,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,07,600 ரூபாயாகவும் எகிறிது.

Continues below advertisement

இந்த சூழலில், 20-ம் தேதியான நேற்று ஒரே நாளில், தங்கத்தின் வலை 3,600 ரூபாய் அதிகரித்து பேரதிர்ச்சி அளித்தது. காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,08,880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 13,610 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்நிலையில், மாலையில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 290 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று மட்டும் சவரனுக்கு 4,120 ரூபாய் உயர்வு

இந்த சூழலில், இன்று காலையிலேயே சவரனுக்கு மேலும் 2,800 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 350 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்தை கடந்து, 14,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியது தங்கத்தின் விலை. அதன்படி, கிராமிற்கு மேலும் 165 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,415 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,15,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிற்பகலில் விலை உயர்ந்த வெள்ளி

இதேபோல், இன்று காலை விலை ஏற்றம் இல்லாமல் இருந்த வெள்ளி, பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்ற வாரத்தின் இறுதியில் கிராம் 310 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, இந்த வாரத்தில் தொடக்க நாளில், அதாவது 19-ம் தேதி 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வெள்ளியின் விலை 20-ம் தேதியான நேற்று காலையில் கிராமிற்கு 12 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், மாலையில் கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், இன்று பிற்பகலில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 345 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 4,120 ரூபாய் விலை உயர்ந்து, பொதுமக்கள் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளது.