உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்காரணமாக, தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 719 நேற்று விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று  கிராமிற்கு ரூபாய் 108 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் சவரனுக்கு ரூபாய் 864 அதிகரித்து ரூபாய் ரூபாய் 38 ஆயிரத்து 616க்கு விற்கப்படுகிறது.


 






இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.