சென்னையில் 22 காரட் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூபாய் 4 ஆயிரத்து 626க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 37 ஆயிரத்து 8க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 14 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 640க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 112 அதிகரி்த்து ரூபாய் 37 ஆயிரத்து 120க்கு விற்கப்படுகிது.


24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5 ஆயிரத்து 42க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 40 ஆயிரத்து 336க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 62க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 62 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.





இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.











அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது. 


தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.