அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், அதிமுக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் கூறினார்.  செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ் “தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றுதான் தீபாவளி. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியை தழுவும்” என்றார். 


மேலும் “கே.பி.முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் கூட்டணியில் இருந்து விலகல். தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இந்த முடிவு எடுத்துள்ளார்” எனவும் சுதீஷ் கூறினார்...