நேரடி வரி வசூலானது குறித்து, நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2022 - 23 ஆம் நிதியாண்டில், ஜனவரி 10 ஆம் தேதி வரையில் ரூ.14. 71 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது, கடந்த நிதி ஆண்டை விட 24.58 சதவிகிதம் அதிகமாக விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




நிதியாண்டு வசூல்:


ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஒரு நிதியாண்டு என அழைக்கிறோம். 


ஒவ்வொரு நிதியாண்டிலும், நேரடி வருவாயில் குறிப்பிட்ட அளவு நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல்  1 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 வரையிலான காலத்தில் 14. 71 லட்சம் கோடி ரூபாய்  நேரடி வரியானது வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த நிதியானது கடந்த நிதியாண்டான 2021-22 விடவும் 24. 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.   மேலும், பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட நேரடி வரியில் இதுவரை  86.88 சதவிகிதம் நிதி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.   


நேரடி வரி:


நிறுவன வரி மற்றும் வருமான வரி ஆகியவை நேரடி வரியாக கருதப்படுகிறது. கடந்த நிதியாண்டைவிட நிறுவன வரி வசூலானது 19.72 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், வருமான வரி வசூலானது 30.46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து படிக்க: உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் எல்லைப்பகுதியில் முதல் பெண் அதிகாரி.. யார் அவர்?...


தொடர்ந்து படிக்க:Vande Bharat Express: தொடர்ந்து இரண்டாவது நாளாக கல்லால் தாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. நள்ளிரவில் அட்டகாசம்..